எல் பாஜியோவில் இருந்து டிஜுவானா செல்லும் மெக்சிகோ உள்நாட்டு விமானத்தை பயணி ஒருவர் கடத்த முயன்றதால், அந்த விமானம் குவாடலஜாராவுக்கு திருப்பி விடப்பட்டது. 

மெக்சிகோ உள்நாட்டு விமானத்தை பயணி ஒருவர் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எல் பாஜியோவில் இருந்து டிஜுவானா செல்ல விருந்த மெக்சிகோ உள்நாட்டு விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் அந்த விமானத்தை கடத்த முயன்றுள்ளார். மேலும் அந்த விமானத்தை அமெரிக்காவிற்குப் பயணிக்க அவர் மிரட்டிய நிலையில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதை தொடர்ந்து பயணிகள் விமானம் மத்திய மெக்சிகோவில் உள்ள குவாடலஜாராவுக்குத் திருப்பிவிடப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.. விமான நிறுவன பணியாளர்களால் கட்டுப்படுத்தப்பட்ட அந்த பயணியை அதிகாரிகள் ஒருவழியாக கைது செய்தனர்.

சிரிய தலைநகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்! நாட்டை விட்டு தப்பியோடிய அதிபர் அசாத்!

விமானத்தின் உள்ளே நேரில் பார்த்த பயணி ஒருவர் படம் பிடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் அதிர்ச்சியான தருணத்தை பார்க்க முடிகிறது.

Scroll to load tweet…

பின்னர் அந்த நபரை அதிகாரிகளிடம் ஒப்படைத்த பிறகு, வோலாரிஸ் 3401 என்ற அந்த விமானம் அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள டிஜுவானாவுக்குச் செல்லும் வழியில் தொடர்ந்தது.

வோலாரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அனைத்து பயணிகள், பணியாளர்கள் மற்றும் விமானம் பாதுகாப்பாக உள்ளனர். மீதமுள்ள பயணிகள் தங்க வைக்கப்பட்டு, அவர்களது இறுதி இலக்கை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோலாரிஸின் தலைமை நிர்வாக அதிகாரி, என்ரிக் பெல்ட்ரானெனா இதுகுறித்து பேசிய போது, "இன்று நாங்கள் எல் பாஜியோ - டிஜுவானா பாதையை உள்ளடக்கிய வோலாரிஸ் விமானம் 3041 இல் ஒரு வித்தியாசமான சூழ்நிலையை எதிர்கொண்டது. ஒரு பயணி விமானத்தை அமெரிக்காவிற்கு திருப்பி விட முயன்றார். 

வெறும் வெள்ளைத்தாள் ஓவியம் ரூ.9 கோடிக்கு ஏலம்! இதுல அப்படி என்ன இருக்கு?

ஆனால் எங்கள் குழுவினரின் தொழில்முறை மற்றும் விரைவான பதிலுக்கு நன்றி, நிறுவப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் செயல்படுத்தப்பட்டன. விமானம் குவாடலஜாரா விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.