Asianet News TamilAsianet News Tamil

கொரோனா தொற்றில் மின்னல் வேகத்தில் பாகிஸ்தான்...!! 1000 பேருக்கு கொரோனா 7 பேர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தானில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு தகவல் தெரிவித்துள்ளது .

Pakistan reports more than 1,000 confirmed cases of corona virus
Author
Delhi, First Published Mar 25, 2020, 6:03 PM IST

பாகிஸ்தானில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு தகவல் தெரிவித்துள்ளது .   இன்று காலை வெளியான பத்திரிக்கை செய்தியில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது கைபர் பக்துன்க்வா சுகாதார அமைச்சர் தைமூர் கான் ஜாக்ராவின் செய்தித்தொடர்பாளர் இத்தகவலை தெரிவித்துள்ளார் .  அதேபோல கைபர் பக்துன்க்காவில்  புதிதாக 39 பேருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது  இதானால் அங்கு  கொரோனாவால் பாதித்துவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.  நேற்றைய முன்தினம் பலுசிஸ்தான் சிந்து இஸ்லாமாபாத் மற்றும்   கில்கிட்-பால்டிஸ்தானில் வைரஸ் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pakistan reports more than 1,000 confirmed cases of corona virus 

இந்நிலைநில் பலுசிஸ்தான்  அரசு செய்தித்தொடர்பாளர் மாகாணத்தில்  புதிதாக 5 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார் மொத்தத்தில் பலுசிஸ்தானில் 115 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் சிந்தில் மூன்று பேரும்  கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் இஸ்லாமாபாத்தில் தல ஒருவருக்கும் புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.  பாகிஸ்தானின் சிந்து மாகாணம் இதுவரையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாகாணமாக கருதப்படுகிறது.  இந்த மட்டும் சுமார்  413 பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது .  

கைபர் பக்துன்க்வாவில்  78 பேருக்கும் , கில்கிட்-பால்டிஸ்தானில் சுமார் 81 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் பஞ்சாபில் 296  பேருக்கும் ஆசாத் ஜம்மு-காஷ்மீரில் 16 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Pakistan reports more than 1,000 confirmed cases of corona virus

இந்நிலையில் பாகிஸ்தானில் இதுவரை வைரஸ் தொற்றுக்கு ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் செவ்வாய்க்கிழமை முதல் மரணம் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .   அதேபோல ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்பவும் சந்தேகத்துக்குரிய  யாத்ரீகர்களை பரிசோதிக்கும்படி மருத்துவ குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது அப்போது அவர்களை சோதனை செய்தலில் பலருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையின் மூத்த உறுப்பினருமான , கொரோனா வைரஸிற்கான ஜிபி அரசாங்கத்தின் மைய நபருமான டாக்டர் ஷா ஜமான் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios