பாகிஸ்தானின் வலிமையான உளவு துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவர் ரிஸ்வான் அக்தரை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் எல்லைக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதிலும், அவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. முக்கியப் பங்காற்றுகிறது.
இந்த சூழலில் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் உளவுத்துறை தலைவராக ரிஸ்வான் அக்தர் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். இவர் நியமிக்கப்பட்டதில் இருந்து இந்தியாவின் எல்லைக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவுவது, துப்பாக்கி சூடு நடத்துவது, ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.

