இந்தியாவுடனான பதற்றமான சூழலுக்கு மத்தியில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை இரவு பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்தது. இந்தச் சூழலில், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் ஆசிம் முனீர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போதைய கூட்டுப் படைத்தலைமைத் தலைவரான ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தனிப்பட்ட லட்சியங்களுக்காக நாட்டைக் குழப்பத்திற்கும் சரிவுக்கும் இட்டுச் சென்றதாக ஜெனரல் முனீர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

முனீரின் தலைமையால் உயர் அதிகாரிகளுக்குள் ஒரு பிரிவினர் நீண்ட காலமாக அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அசிம் முனீர் உள்நாட்டுக் கொந்தளிப்பையும் இராஜதந்திர தோல்விகளையும் அதிகப்படுத்தியதற்காக அதிருப்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவத் தளபதி அசிம் முனீர்:

பிப்ரவரி 14, 2019 அன்று இந்தியாவில் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 40 வீரர்கள் உயிர்நீத்தனர். இந்தத் தாக்குதலை பாகிஸ்தானின் உளவு நிறுவனமான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) திட்டமிட்டபோது, ஆசிம் முனீர் அதன் தலைவராக இருந்துள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அசிம் முனீர் பாகிஸ்தானின் ராணுவத் தளபதி பதவிக்கு வந்தார். ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலிலும் அசிம் முனீர் சூத்ரதாரியாக செயல்பட்டார் என்று கூறப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் அதிகரிப்பு:

வியாழக்கிழமை இரவு ஜம்மு மற்றும் பதான்கோட் உட்பட ராணுவ தளங்களை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா விரைவாக முறியடித்தது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

முக்கியக் குறிப்பு: இந்தத் தகவலின் நம்பகத்தன்மையை ஏசியானெட் நியூஸ் உறுதிபடுத்த முடியாது. அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.