ஏர் இந்தியா விமானம் மஸ்கட்டில் இருந்து புறப்படும் போது விமானத்தில் இருந்து புகை கிளம்பியது.
ஓமன், மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புகைமூட்டம் வந்ததால் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விமானம் புறப்படுவதற்கு சற்று முன், இடது இறக்கையில் இருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது.
Add Asianetnews Tamil as a Preferred Source


இதையடுத்து, அவசர கால ஜன்னல் வழியாக பயணிகள் வெளியே கொண்டு வரப்பட்டனர். உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 141 பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அச்சப்படத் தேவையில்லை என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இதில் சுமார் 14 பேர் காயமடைந்தனர் என்று தற்போது வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..‘அந்த’ இடத்தில் கைவைத்த பாஜக பொதுச்செயலாளர்.. சசிகலா புஷ்பாவிற்கு நடந்தது என்ன ? சர்ச்சையில் பாஜக!
