Asianet News TamilAsianet News Tamil

சீனாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 111 பேர் பலி.. 230 பேர் படுகாயம்..

சீனாவின் கன்சு பகுதியில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 111 பேர் உயிரிழந்தனர். 230 பேர் காயமடைந்தனர்.

6.2 magnitude earth quake strikes china's Gansu 111 dead, 230 injured Rya
Author
First Published Dec 19, 2023, 8:37 AM IST

சீனாவின் கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 111 பேர் கொல்லப்பட்டனர், 230 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் 35 கிமீ ஆழத்தில் அதன் மையப்பகுதி கன்சுவின் மாகாண தலைநகரான லான்ஜோவிலிருந்து 102 கிமீ மேற்கு-தென்மேற்கில் ஏற்பட்டதாக ஐரோப்பிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து காணாமல் போனவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இரண்டு வடமேற்கு மாகாணங்களுக்கு இடையிலான எல்லையில் இருந்து 5 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் பேரிடர் தடுப்பு, குறைப்பு மற்றும் நிவாரணத்திற்கான தேசிய ஆணையம் மற்றும் அவசரநிலை மேலாண்மை அமைச்சகம், நிலை-IV பேரிடர் நிவாரண அவசரநிலையை செயல்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பேரழிவுப் பகுதி அதிக உயரத்தில் இருப்பதாலும், அங்கு குளிர்ச்சியான வானிலை நிலவுவதாலும், நிலநடுக்கத்தைத் தாண்டிய காரணிகளால் ஏற்படும் இரண்டாம் நிலை பேரழிவுகளைத் தடுக்க மீட்பு முயற்சிகள் செயல்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள லின்சியா, கன்சு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை வெப்பநிலை மைனஸ் 14 டிகிரி செல்சியஸாக இருந்தது. கடந்த வாரம் தொடங்கிய குளிர் அலையானது நாடு முழுவதும் தொடர்ந்து வீசுவதால், சீனாவின் பெரும்பாலான பகுதிகள் உறைபனி வெப்பநிலையுடன் போராடி வருகின்றன. இதனால் நீர், மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன, ஆனால் அதிகாரிகள் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பேரழிவின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கும் உள்ளூர் நிவாரண நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதலை வழங்குவதற்கும் ஒரு பணிக்குழு அனுப்பப்பட்டது என்று சீன ஊடகங்கள் தெரிவித்தன.

பயணிகளிடம் இருந்து பல லட்சம் திருட்டு.. விமானத்தில் பலே வேலை பார்த்த ஆசாமி - சிங்கப்பூரில் சிக்கியது எப்படி?

இந்த நிலநடுக்கம் 1900 ஆம் ஆண்டு முதல் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 200 கிமீ தொலைவில் 6 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களில் ஒன்று என்று அரசு தொலைக்காட்சி CCTV தெரிவித்துள்ளது. செவ்வாய்கிழமை விடியும் முன் 3.0 ரிக்டர் அளவு மற்றும் அதற்கு மேல் உள்ள 9 பின்அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக சிசிடிவி தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios