Asianet News TamilAsianet News Tamil

ஆபாச படம் பார்த்துவிட்டு சிறுமியை, 5 பேர் மாறி மாறி கற்பழித்த கொடுமை!

5 minors gang-rape 8-year-old girl after watching porn on mobile
5 minors gang-rape 8-year-old girl after watching porn on mobile
Author
First Published Jul 17, 2018, 3:22 PM IST


இணைய தளத்தில் ஆபாச படங்கள் நிறைய இருப்பதால் சிறுவர்களிடம் மொபைல் கிடைப்பதால் அவர்கள் ஆபாச படங்களைப் பார்த்து கெட்டுப்போகிறார்கள். ஆபாசபட இணையதளங்களால் இலம்பெகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

ஆபாச படம் பார்த்து விட்டு 5 சிறுவர்கள்  8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேராடூன் சஹஸ்பூர் பகுதியில் வசிக்கும் 5 சிறுவர்கள் செல் போனில் ஆபாச படங்களைப் பார்த்துள்ளனர். இதனையடுத்து, வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியை கூட்டாக மாறி மாறி கற்பழித்துள்ளனர். இந்த குற்றத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் 5 பேரும் வெள்ளிக்கிழமை சஹஸ்பூர் போலீசார் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சஹஸ்பூர் போலீசார் கூறுகையில், சிறுவர்கள் போனில் ஆபாச படங்களைப் பார்த்த பின்னர், சிறுமியை பலாத்காரம் செய்வதற்கு  சில  நாட்களுக்கு முன்பே திட்டம் போட்டுள்ளனர். அதற்காக அவர்களுக்கு  தெரிந்த பெண்கள் ஒரு முழுவதும் வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணை குறி வைத்துள்ளனர். அதன் பிறகு அந்த சிறுமியை இவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு போக்சோ சட்டத்தின் படி கைது செய்யப்பட்ட சிறுவர்களை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்" என்று கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios