Asianet News TamilAsianet News Tamil

48,500 ஆண்டுகள் பழமையான Zombie வைரஸ்கள்.. மனித இனத்திற்கே பேராபத்து.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை..

ஆர்டிக் பகுதிகளில் உறைந்த 48,500 ஆண்டுகள் பழமையான Zombie வைரஸ்களால் ஏற்படும் ஆபத்து குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

48500 year-old Zombie viruses may 'start new disease outbreak scientists warns in tamil Rya
Author
First Published Jan 24, 2024, 8:08 AM IST

காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல காரணங்களால் புதுப்புது வைரஸ்கள் உருவாகி வருகின்றன. இதன் காரணமாக புதிய தொற்றுநோய்களும் தோன்றி வருகின்றன. அந்த வகையில் கடந்த 20219-ன் இறுதியில் சீனாவில் பரவிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. இதனால் வைரஸ், பெருந்தொற்று போன்ற வார்த்தைகள் மகக்ள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நிலையில் மற்றொரு ஆபத்தான வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆர்டிக் பகுதிகளில் பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்து கிடக்கும் வைரஸ்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்த விஞ்ஞானிகள், அவற்றில் இருந்து 'ஜாம்பி வைரஸ்களை' வெளியிடலாம், என்று எச்சரித்துள்ளனர். மேலும் இந்த ஜாம்பி வைரஸ் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும் என்றூம் கூறியுள்ளனர்.

வெப்பநிலை அதிகரித்து வருவதால் புவி வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதன் காரணமாக உறைந்த நிலையில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகுவதால் அதில் இருந்து ஜாம்பி வைரஸ் வெளியாகலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு சைபீரியன் உறைந்த பனிக்கட்டிகளில்  இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து சில வைரஸ்கள் மீண்டும் புத்துயிர் பெற்றதாகவும் தெரிவித்தனர்.

 

அதிகமாக எலுமிச்சை தண்ணீரை குடித்தால் உங்கள் உடலில் என்ன நடக்கும்? நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..

Aix-Marseille பல்கலைக்கழகத்தின் மரபியல் நிபுணர் Jean-Michel Claveri இதுகுறித்து பேசிய போது, "தற்போது, தொற்றுநோய் அச்சுறுத்தல் தொடர்பான பகுப்பாய்வு தெற்குப் பகுதிகளில் தோன்றி பின்னர் வடக்கே பரவக்கூடிய நோய்களின் மீது கவனம் செலுத்துகிறது. மாறாக, வெளிப்படக்கூடிய  ஒரு வைரஸ் பரவலுக்கு அதிக கவனம் செலுத்தப்படவில்லை. ஆனால் தொலைதூர வடக்கில், (ஆர்டிக் பகுதிகளில்) மனிதர்களைப் பாதிக்கக்கூடிய மற்றும் ஒரு புதிய நோய் பரவத் தொடங்கும் திறன் கொண்ட வைரஸ்கள் அங்கு உள்ளன." என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் "நாம் தனிமைப்படுத்திய வைரஸ்கள் அமீபாவை மட்டுமே பாதிக்கக்கூடியவை மற்றும் மனிதர்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும், மற்ற வைரஸ்கள்  தற்போது நிரந்தர உறைபனியில் உறைந்திருக்கும் . அவை மனிதர்களுக்கு நோய்களைத் தூண்ட முடியாது என்று அர்த்தம் இல்லை. மரபணு தடயங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். புவி வெப்பமடைதல் தாக்கத்திலிருந்து மற்றொரு ஆபத்து வருகிறது.: ஆர்க்டிக் கடலின் உறைந்த பனி வேகமாக வருகிறது.

. இது கப்பல் போக்குவரத்து, போக்குவரத்து மற்றும் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கிறது. சைபீரியா, மிகப்பெரிய சுரங்க நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு, எண்ணெய் மற்றும் தாதுக்களை பிரித்தெடுக்க ஆழமான பெர்மாஃப்ரோஸ்டில் பரந்த துளைகளை செலுத்தப் போகிறது. அந்த செயல்பாடுகள் அங்கு இன்னும் செழித்து வளரும் ஏராளமான நோய்க்கிருமிகளை வெளியிடும். சுரங்கத் தொழிலாளர்கள் உள்ளே நுழைந்து வைரஸ்களை சுவாசிப்பார்கள். இதன் விளைவுகள் பேரிடராக இருக்கலாம்." என்று எச்சரித்தார்.

நோய் X என்பது என்ன? அதன் பரவல் குறித்து விஞ்ஞானிகள் ஏன் கவலைப்படுகின்றனர்?

உறைந்த பனியில் என்ன வைரஸ்கள் உள்ளன என்று நமக்கு தெரியாது, ஆனால் ஒரு நோய் பரவலை தூண்டும் திறன் கொண்ட ஒரு உண்மையான ஆபத்து இருப்பதாக நான் நினைக்கிறேன், உதாரணமாக போலியோவின் பழங்கால வடிவ வைரஸ் பனிக்கட்டியில் இருந்து வெளிப்படலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்..

Follow Us:
Download App:
  • android
  • ios