பிரேசில் நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள ரோரைமை சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், 25 பேர் பலியானார்கள்.

பிரேசில் நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள மகாணமான ரோரைமைவில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது.

இதில் கைதிகள் ஒருவொருக்கொருவர் கத்தியாலும் தங்கள் கைகளில் கிடைத்த பொருட்களாலும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இந்த பயங்கர மோதலில் சிறை கைதிகள் 25 பேர் கொல்லப்பட்டனர்.

பார்வையாளர்கள் நேரத்தில் இந்த திடீர் மோதல் வெடித்ததாகவும் பார்வையாளர்களாக வந்த கைதிகளின் உறவினர்களையும் சிறை கைதிகள் பணைய கைதிகளாக பிடித்துகொண்டதாகவும் ரோரைமா மாகாண நீதித்துறை செயலர் உஸேல் காஸ்ட்ரோ தெரிவித்தார். பின்னர் பணையை கைதிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.