Viral : பீச் திருமணத்தில் அழையா விருந்தாளியாக அடுத்தடுத்து வந்த பேரலை!

ஹவாய் தீவில் நடைபெற்றுக்கொண்டிந்த திருமணத்தின் போது, அடுத்தடுத்த வந்த பேரலைகளால் பதற்றம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.
 

Share this Video

ஹவாய் பெரிய தீவில் நேற்று ஒரு பீச் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அடுத்தடுத்த பெரிய பெரிய அலைகள் கரையை தாக்கின. இதனால், திருமணநிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடினர். அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரலை காட்சிகள் திருமண நிகழ்ச்சியின் போது ஒரு பகுதியாக படம் பிடிக்கப்பட்டு தற்போது அது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video