Asianet News TamilAsianet News Tamil

சொந்த குரலில் பாடி அசத்திய நடிகர் கொட்டாச்சி.. அதை ரசித்துக்கொண்டே ரத்த தானம் செய்த இளைஞர்கள் - வீடியோ!

Actor Kottachi : புதுச்சேரி ஜோதி அறக்கட்டளை மூலம் அரசு பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் பழங்குடியின, தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் ஏழ்மையான மாணவ மாணவியருக்கான இலவச இசை பள்ளி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் இதற்கு முன்னோட்டமாக ரத்த தானம் செய்யும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இசை கலைஞர்கள் ஜிப்மர் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
மூலக்குளம் பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் சிறப்பு விருந்தினராக உழவர் கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், நடிகர் மற்றும் இயக்குனர் கொட்டாச்சி அன்னமகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். 

ரத்ததான முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் இசை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கொட்டாச்சி தனது சொந்த குரலில் "மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ"பாடலை பாடினார். இவ்விழாவில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
இவ்விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் ஜோதி அறக்கட்டளை நிறுவனர் சரவணன் அர்மோன்ட் செய்திருந்தார்.

Video Top Stories