வெளிச்சத்துக்கு வந்தது : ஜியோவின் 1500 ரூபாய்க்கான  ஸ்மார்ட் போன்- வாடிக்கையாளர்கள்  உற்சாகம்....!  

ரிலையன்ஸ் ஜியோவின்  பல  சலுகையால்,  வாடிக்கையாளர்களை  தன் வசம் வைத்துள்ள ஜியோ,  தற்போது  உலகிலேயே  மிக குறைந்த விலையில்,  ஸ்மார்ட்போன்  வெளியிட உள்ளது.

அதன்படி, , ரிலையன்ஸ்  ஜியோ அறிமுகம்  செய்ய  திட்டமிட்டிருந்த, மிக குறைந்த  விலையிலான  ஸ்மார்ட் போன் , தற்போது  இணையத்தில்  வெளிவந்துள்ளது.

மேலும் , இந்த ஸ்மார்ட் போனின் விலை 1500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் :

ஷார்ட் கீ கொண்டுள்ளது . இதன் மூலம் ,  மை  ஜியோ , ஜியோ  லைவ்  டிவி, ஜியோ  வீடியோ  மற்றும் ஜியோ மியூசிக்  ஆப்ஸ் யாக முடியும்.

ஷார்ட் கீக்கு  கீழ்பகுதியில்,

T9 keypad  இருக்கும் . இதனை  நார்மலாக  பயன்படுதிகொள்ளமுடியும் .

இந்த ஸ்மார்ட் போன் , Android operating system  மூலம்  இயங்குமா  இல்லையா  என்பது இன்னும்  உறுதிபட  தெரியவில்லை .

இருந்தபோதிலும், முகேஷ் அம்பானி  ஏற்கனவே 4 ஜி சேவையை  பயன்படுத்தும் விதமாக  குறைந்த விலையில்,  ஸ்மார்ட் போன்   அறிமுகம் செய்ய உள்ளதாக  தெரிவித்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே  மிக குறைந்த விலையில் கிடைக்ககூடிய   ஸ்மார்ட் போன்  இது  என்பது குறிபிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோ வெளியிடும்  இந்த  ஸ்மார்ட் போன்  லாவா  நிறுவன  பெயரிலும்  வெளிவரும் என்பது  கூடுதல் தகவல்.