மடிக்கணினி மற்றும் டேப்லெட் இறக்குமதிக்கு தடை விதித்த மத்திய அரசின் திடீர் முடிவு விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

ஆகஸ்ட் 3, 2023 அன்று, மேக் இன் இந்தியாவை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் தனிப்பட்ட கணினிகளின் இறக்குமதியைத் தடை செய்ய மத்திய மோடி அரசாங்கம் முடிவு செய்தது. ஆனால் தற்போது இந்த முடிவை அமல்படுத்துவதில் அரசு தாமதம் செய்யலாம் என நம்பப்படுகிறது. 

லேப்டாப், டேப்லெட், பெர்சனல் கம்ப்யூட்டர் இறக்குமதி தொடர்பாக புதிய விதிமுறைகள் வெளியிடப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நாட்டில் நம்பகமான ஹார்டுவேர் அமைப்புகளை உறுதி செய்வதோடு, இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதே அரசின் நோக்கம் என்று ராஜீவ் சந்திரசேகர் கூறினார். 

இந்த வகைப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் விரும்புவதாக அவர் கூறினார். ட்விட்டரில் ஒரு பயனருக்குப் பதிலளித்த அவர், இது உரிமம் தொடர்பான விஷயம் அல்ல, ஆனால் இறக்குமதியை ஒழுங்குபடுத்தும் விஷயம் என்று கூறினார். இறக்குமதிக்கு விண்ணப்பிக்க நிறுவனங்களுக்கு அரசு மேலும் சில கால அவகாசம் அளிக்கலாம். 

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, இறக்குமதிக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் IT வன்பொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்யலாம். அரசின் இந்த முடிவால், லேப்டாப், டேப்லெட், பெர்சனல் கம்ப்யூட்டர் ஆகியவற்றின் விலையில் உயர்வு இருக்காது.

Scroll to load tweet…

அதே போல் இவை சப்ளை செய்வதிலும் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவற்றை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வெறும் 5 நிமிடங்களில் வழங்கப்படும் என்றார். DGFT இன் ஆன்லைன் உரிம போர்டல் தயாராக உள்ளது. இது அடுத்த ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.

மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகளின் இறக்குமதியை கடுமையாக்குவதன் மூலம், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தவும் இது உதவும் என்று கூறப்படுகிறது.

Scroll to load tweet…

Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!