bsnl announces to launch new 4g services

இந்தியாவில் பல தொலைத்தொடர்பு நிருவனங்கள் போட்டியை சமாளிக்க சிறப்பு சலுகை மட்டுமின்றி, அதி நவீன வேகத்தில் செயல்படக் கூடிய இணைய சேவையான 4G சேவையை வழங்கி வருகிறது .இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனமானது , இதுவரை 3G சேவையை மட்டும் வழங்கி வந்தது . தற்போது மற்ற தொலைத்தொடர்பு நிருவனங்களோடு போட்டியை சமாளிக்க, 4G சேவையில் இறங்கியுள்ளது

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதன்படி, இதற்கு முன்னதாக பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள 2ஜி சேவைக்கு பதிலாக புதிய 3G,4G சேவையை வழங்க 28,000 நவீன டவர்களை வைக்க உள்ளதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை அனைத்தும் , பேஸ்-8 விரிவாக்க நடவடிக்கையின் படி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இதன் காரணமாக மிக விரைவில், இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனம் , 4G சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .