<!--[if gte mso 9]> <o:AllowPNG/> <![endif]-->

<!--[if gte mso 9]>Normal0 <w:TrackMoves/> <w:TrackFormatting/> <w:PunctuationKerning/> <w:ValidateAgainstSchemas/> falsefalsefalse <w:DoNotPromoteQF/> EN-INX-NONEX-NONE <w:BreakWrappedTables/> <w:SnapToGridInCell/> <w:WrapTextWithPunct/> <w:UseAsianBreakRules/> <w:DontGrowAutofit/> <w:SplitPgBreakAndParaMark/> <w:EnableOpenTypeKerning/> <w:DontFlipMirrorIndents/> <w:OverrideTableStyleHps/> <m:dispDef/> <![endif]--><!--[if gte mso 9]><![endif]--><!--[if gte mso 10]><![endif]--><span style="font-family:latha,sans-serif; font-size:9.0pt; line-height:107%">கடலூர், </span></p><p>&nbsp;<p class="MsoNormal" style="tab-stops:143.25pt"><span style="font-family:latha,sans-serif; font-size:9.0pt; line-height:107%">தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி, கடலூர் மாவட்டத்தில் வியாபாரிகள் நேற்று கடைகளை மூடி அஞ்சலி செலுத்தினர். ஊரே வெறுமையாய் இருந்தது.<br /><br />தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவினால் </span><span lang="EN-US" style="font-family:latha,sans-serif; font-size:9.0pt; line-height:107%; mso-ansi-language:EN-US">திங்கள்கிழமை </span><span style="font-family:latha,sans-serif; font-size:9.0pt; line-height:107%">இரவு மரணம் அடைந்தார். சென்னை மெரீனா கடற்கரையில் அவரது உடல் செவ்வாய்க்கிழமை ஏராளமான மக்களின் கண்ணீர் அஞ்சலியோடு அடக்கம் செய்யப்பட்டது. </span></p></p><p class="MsoNormal" style="tab-stops:143.25pt"><span style="font-family:latha,sans-serif; font-size:9.0pt; line-height:107%">முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டத்திலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் அடைத்திருந்தன.<br /><br />அதேபோல் கடலூர் மாவட்டத்தில் கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், மருந்துக்கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. உழவர்சந்தை மற்றும் காய்கறி சந்தைகளும் அடைத்திருந்தன.</span></p><p class="MsoNormal" style="tab-stops:143.25pt"><span style="font-family:latha,sans-serif; font-size:9.0pt; line-height:107%">அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் ஓடவில்லை. இதனால் பேருந்து நிலையங்கள், பஜார்கள், சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறுமையாய் கிடந்தது.<br /><br />கடலூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையமும் வெற்றிடமாகவே காணப்பட்டது. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அடைத்திருந்தன. லாரன்ஸ் சாலையில் நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும், விடுதிகளும் அடைத்திருந்ததால் லாரன்ஸ் சாலையும் வெறிச்சோடி காணப்பட்டது. </span></p><p class="MsoNormal" style="tab-stops:143.25pt"><span style="font-family:latha,sans-serif; font-size:9.0pt; line-height:107%">இதேபோல் பாரதிசாலை, நேரு சாலை, இம்பீரியல் சாலை, செம்மண்டலம் சாலை என அனைத்து முக்கிய சாலைகளும் மக்கள் நடமாட்டமில்லாமல் இருந்தது. முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திரையரங்குகளில் காட்சிகள் இரத்து செய்யப்பட்டு இருந்ததால், திரையரங்குகளும் மூடிக்கிடந்தன. </span></p><p class="MsoNormal" style="tab-stops:143.25pt"><span style="font-family:latha,sans-serif; font-size:9.0pt; line-height:107%">விருத்தாசலத்தில் பாலக்கரை, பெரியார்நகர், கடைவீதி, பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. </span></p><p class="MsoNormal" style="tab-stops:143.25pt"><span style="font-family:latha,sans-serif; font-size:9.0pt; line-height:107%">சிதம்பரம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சிதம்பரம் நகரில் தேரோடும் நான்கு வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் காசுக்கடை தெரு வெறிச்சோடி காணப்பட்டது. </span></p><p class="MsoNormal" style="tab-stops:143.25pt"><span style="font-family:latha,sans-serif; font-size:9.0pt; line-height:107%">மேலும், உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இதுதவிர, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, திட்டக்குடி என மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.</span></p>