89 விதமான தொழில்களை தொடங்க ரூ.2 கோடி வரை கடன்; மானியமும் உண்டு - பயன்படுத்திக்கோங்க மக்களே!
தூத்துக்குடி
சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து ரூ.2 கோடி வரை கடன் மற்றும் மானியம் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமம் மற்றும் நகர் புறங்களில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்வுக் குழுக் கூட்டத்தில் உதவி ஆட்சியர் அனு, மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், மத்திய அரசு குறு, சிறு தொழில் நிறுவன உதவி இயக்குநர் செரினாபப்பி, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் விஜயகுமார், மாவட்ட தொழில்மைய திட்ட மேலாளர் சுவர்ணலதா, காதர் கிராம தொழில் ஆணையம், காதர் கிராம தொழில் வாரிய அதிகாரிகள் மற்றும் வங்கி மேலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.