Asianet News TamilAsianet News Tamil

ரெட் அலர்ட்.. இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை.. 22 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் 22 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

Very Heavy Rain in 4 districts - Today Weather Report
Author
First Published Oct 9, 2022, 1:44 PM IST

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவும்‌ வளிமண்டல
மேலடுக்கு சுழற்சி‌ காரணமாக,

09.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, கோவை‌, திருப்பூர்‌, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, திண்டுக்கல்‌, மதுரை, திருச்சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்‌சி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர்‌, இராமநாதபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை
பெய்யவாய்ப்புள்ளது.

10.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, திண்டுக்கல்‌, மதுரை, தேனி, திருச்சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கடலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்‌, தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர்‌, மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:விடுதலை புலிகள் அமைப்புகளுடன் தொடர்பு.. துப்பாக்கி பறிமுதல் வழக்கு.. என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை..

11.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, திருச்சி, வேலூர்‌ மற்றும்‌ திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

12.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர்‌, திருவள்ளுர்‌, திருவண்ணாமலை, வேலூர்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி
பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

13.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, திருவண்ணாமலை, வேலூர்‌, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌ மற்றும்‌ இராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை
பெய்ய வாய்ப்புள்ளது

மேலும் படிக்க:புரட்டாசி மாத பெளர்ணமி.. மழையை பொருட்படுத்தாமல் சதுரகிரி கோவிலில் குவிந்த மக்கள்..

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌
இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios