Asianet News TamilAsianet News Tamil

கையெழுத்தானது 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம்… மகிழ்ச்சியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள்!!

அரசு போக்குவரத்து கழகம் ஊழியர்களின் 14 ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

transport employees 14th pay hike agreement signed
Author
Tamilnadu, First Published Aug 24, 2022, 6:55 PM IST

அரசு போக்குவரத்து கழகம் ஊழியர்களின் 14 ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 7-ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்து கழக பயற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் 14 வது ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையும் படிங்க: ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு.. சிகிச்சைக்காக ஜெர்மனி செல்கிறார் கனிமொழி !

ஏழு கட்டங்களாக நடந்த பேச்சு வார்த்தையில் அரசு போக்குவரத்து கழகம் ஊழியர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பது இனி 4 ஆண்டுக்கு ஒரு முறை என மாற்றப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஓட்டுனருக்கு ரூ.2,012 அதிகபட்சம் ரூ.7,981 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடத்துனரும் குறைந்தபட்சம் 1ரூ.9,965 அதிகபட்சம் ரூ.6,640 என ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த பேச்சுவார்த்தையில் 66 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன.

இதையும் படிங்க: திடீரென விரிசல் விடும் வீடுகள்… அச்சத்தில் மக்கள்… நீலகிரியில் நடப்பது என்ன?

இந்நிலையில், சிஐடியூ, ஏஐடியூசி ஒப்பந்தம் இறுதி செய்யதை ஏற்கவில்லை. இதனால், சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர். 4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஊதிய ஒப்பந்தத்தை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு பின் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios