Asianet News TamilAsianet News Tamil

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...

Traffic has to offer pension payments to employees - the State High Court ordered the Madurai branch
traffic has-to-offer-pension-payments-to-employees---th
Author
First Published Mar 21, 2017, 5:00 PM IST


போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும் எனவும், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிக்குள் ஓய்வூதியம் முறையாக வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என நலசங்க தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இதுகுறித்த வழக்கு இன்று நீதிபதி சுந்தர் தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும் எனவும், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிக்குள் ஓய்வூதியம் முறையாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும் ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios