TN farmers journey to delhi

பயிர்க்கடன், வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தமிழக விவசாயிகள் இன்று 29வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து, கலந்து கொண்டுள்ளனர்.

எலியை வாயில் கவ்வி பிடித்து, தலைமுடி மற்றும் மீசையை பாதியாக மழித்து, மொட்டையடித்து என பல்வேறு போராட்டம் நடத்தினர். 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் விவசாயிகளை அனைத்து தரப்பு அரசியல் கட்சியினரும், ஆதரவு தெரிவித்தும், அவர்களது கோரிக்கைகளை பிரதமரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

ஆனால், இதுவரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து இதுவரை யாரும், விவசாயிகளை சந்திக்கவில்லை. இதனால், விரக்தியடைந்த விவசாயிகள், பிரதமர் அலுவலகம் அருகே நேற்று நிர்வாண போராட்டம் நடத்தினர். இதனால், அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அரியலூரில் இருந்து 50க்கு மேற்பட்ட விவசாயிகள், வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். இதேபோல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து, ஏராளமானோர் டெல்லி புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.