பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படியா செய்வாங்க ? தம்பி மனைவியை துண்டு துண்டாக வெட்டி வீசிய அண்ணன் !!
திருவாரூர் அருகே பண விவகாரம் தொடர்பாக தனது சொந்த தம்பியின் மனைவியை துண்டு துண்டாக வெட்டி புதரில் வீசிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவர் சிங்கப்பூரில் பணி புரிந்து வருகிறார். இவருக்கும், கோட்டூர் அருகே உள்ள வடக்கு நாணலூர் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகள் எஸ்தருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
ஜோசப் ராஜசேகர் வெளிநாட்டில் வேலை செய்து வந்ததால் மேலாளவந்தசேரி கிராமத்தில் தனது குழந்தையுடன் எஸ்தர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி முதல் எஸ்தரைக் காணவில்லை.
இதுகுறித்து வெளிநாட்டில் இருந்த ஜோசப் ராஜசேகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் ஜோசப் ராஜசேகர் வெளிநாட்டில் இருந்து உடனடியாக ஊருக்கு திரும்பி வந்து தேவங்குடி போலீஸ் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். அதன் பேரில் நீடாமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஜோசப் ராஜசேகரின் அண்ணன் , எஸ்தரை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி இரண்டு சாக்கு மூட்டைகளில் கட்டி மேலாளவந்தசேரி அருகில் உள்ள காரிச்சாங்குடியில், ஆற்றங்கரையில் உள்ள நாணல் புதரில் வீசியதாக கூறினார். இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் எஸ்தரின் உடலை மீட்டனர்.
ஜோசப் ராஜசேகர், வெளிநாட்டில் இருந்து ஒவ்வொரு மாதமும் தான் சம்பாதிக்க பணத்தை தனது அப்பாவிற்கு அனுப்பி வைத்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தந்தை இறந்துவிட்டதையடுத்து சம்பளப் பணத்தை ஜோசப், தனது மனைவி எஸ்தருக்கு அனுப்பி வைக்கத் தொடங்கினார்.
இதனால் அதிருப்தியடைந்த ஜோசப்பின் அண்ணன் நெல்சன், இது தொடர்பாக எஸ்தரிடம் சண்டை போட்டுள்ளார். அப்பொழுது ஆத்திரமடைந்த நெல்சன், எஸ்தரை அரிவாளால் துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில கட்டி வீசியது விசாரணையில் தெரியவந்தது.
பணத்துக்காக தம்பி மனைவியை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி புதருக்குள் வீசிய சம்பவம் நீடாமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.