Asianet News TamilAsianet News Tamil

நாளை முதல் கடையடைப்பு போராட்டம் – ஜவுளி வியாபாரிகள் அறிவிப்பு…

Textile Merchants Struggle at tomorrow in tamilnadu
Textile Merchants Struggle at tomorrow in tamilnadu
Author
First Published Jul 5, 2017, 7:23 PM IST


ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்யக் கோரி, நாளை முதல் 11ஆம் தேதி வரை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே வரி என்ற நோக்கில் மத்திய அரசு கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தியது.

இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் போராட்ட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஜிஎஸ்டி வரியின் சதவிகிதத்தை குறைக்கவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதில், பருத்தி நூலுக்கு 5 சதவீதமும், பாலிஸ்டர் நூலுக்கு 18 சதவீதமும் உற்பத்தி செய்த ஜவுளிப் பொருட்களுக்கு 5 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஜவுளித்துறை பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, நாளை முதல் 11ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனால் நாளொன்றுக்கு 30 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios