TCS ஊழியர்கள் விறு விறு இடமாற்றம்....!!! தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் எதிரொலி.....!!!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைகிடமாக உள்ளதாக தற்போது, அப்போலோ மருத்துவமனையில் இருந்து புதிய அறிக்கை வெளிவந்துள்ளது.
நேற்று மாலை முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.இதனை தொடர்ந்து அவருக்கு இன்று அதிகாலை ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு , தீவிர சிகிச்சை பிரிவில் , தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
மருத்துவர்கள் இயன்றவரை சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அவருக்கு அவர் ECMO கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது , பிரபல நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் , சென்னை கிளையில் பணிபுரியும் ஊழியர்களை, விறு விருப்பாக பெங்களூருக்கு இடம்பெயர தெரிவிதுள்ளர்கள்.
தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால் , சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.