<!--[if gte mso 9]> <o:AllowPNG/> <![endif]-->

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

<!--[if gte mso 9]>Normal0 <w:TrackMoves/> <w:TrackFormatting/> <w:PunctuationKerning/> <w:ValidateAgainstSchemas/> falsefalsefalse <w:DoNotPromoteQF/> EN-INX-NONEX-NONE <w:BreakWrappedTables/> <w:SnapToGridInCell/> <w:WrapTextWithPunct/> <w:UseAsianBreakRules/> <w:DontGrowAutofit/> <w:SplitPgBreakAndParaMark/> <w:EnableOpenTypeKerning/> <w:DontFlipMirrorIndents/> <w:OverrideTableStyleHps/> <m:dispDef/> <![endif]--><!--[if gte mso 9]><![endif]--><!--[if gte mso 10]><![endif]-->வேலூரில் விடுதியில் நுழைந்த குரங்கைப் பிடித்த&nbsp;மருத்துவ மாணவர்கள், அதன் ஆசன வாயில் கம்பைச் சொருகி கொன்று எரித்து புதைத்துள்ளனர்.</p><p>சென்னையில் சில நாள்களுக்கு முன்பு, உயரமான கட்டடத்தில் இருந்து நாய் ஒன்றை தூக்கியெறிந்து அந்த நாய் படும் துயரத்தை இரசித்த மருத்துவ மாணவர்களின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியது. அனைவரும் அதற்கு ஏதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தூக்கி எறிந்தவருக்கு தண்டனை கிடைத்தது.</p><p>இந்த சம்பவம் நடந்து சில மாதங்களே ஆன நிலையில், இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்கள் மருத்துவ மாணவர்கள்.</p><p>வேலூர் கிறித்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் நுழைந்த குரங்கைப் பிடித்து அதனை அடித்து துன்புறுத்தி, கொன்று எரித்து விட்டதாக மருத்துவ மாணவர்கள் 4 பேர் மீது புகார் கூறப்பட்டு, எப்.ஐ.ஆரும் போடப்பட்டது. மாணவர்கள் நால்வரை இடைநீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரி மாணவர்கள் விடுதி அருகே பெண் குரங்கு ஒன்று கடந்த 19-ஆம் தேதி அலைந்து திரிந்து கொண்டிருந்தது.&nbsp; இதை மருத்துவ மாணவர்கள் 4 பேர், விடுதியில் இருந்த பெட்சீட் ஒன்றில் பிடித்து குரங்கின் கை, கால்களை கட்டி துன்புறுத்தி உள்ளனர். சக மாணவர்கள் முன்னால் குரங்கை அடித்து துன்புறுத்திய மாணவர்கள் 4 பேர், தங்களிடம் இருந்த குச்சி, பெல்ட் ஆகியவற்றால் குரங்கை அடித்து துன்புறுத்தியுள்ளனர். எல்லாவற்றுக்கு மேல் குரங்கின் ஆசன வாயில் கம்பை விட்டு துன்புறுத்தி கொன்றுள்ளனர். அதன் பிறகு எரித்து உடலை மாணவர் விடுதி மெஸ்ஸின் பின்புறம் உள்ள இடத்தில் புதைத்துள்ளனர்.</p><p><img src="http://static.asianetnews.com/images/7ddd8695-b390-5b3e-a3f9-0cf5ebefa488/image.jpg" style="height:187px; width:250px" /></p><p>சக மாணவர்கள் முன்னிலையில் நடந்த இந்த கொடூர சம்பவம் வெளியே தெரியவர, மாணவர்களில் சிலர் விலங்கின ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விலங்கின் ஆர்வலர்கள் ஏலும்பாக்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p><p>அந்த புகாரின் அடிப்படையில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவலாளர்கள், குரங்கின் உடலைத் தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.&nbsp; இதில் தொடர்புடைய 4 மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>குரங்கை அடித்து கொடூரமாக கொன்று எரித்த சம்பவம்&nbsp;சமூக வலைதளங்களிலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மருத்துவ சேவையை மக்களுக்காக செய்து, உயிர்நீத்த 20 ரூபா டாக்டரை கடவுளைப் போல பார்க்கின்றனர் மக்கள்.</p><p>அனைத்து மருத்துவர்களையும் கடவுளாக பணியாற்றவில்லை எனட்ராலும் பரவாயில்லை, பிற உயிர்களை துன்புறுத்தி இரசிக்கும் கொரூர குணமுள்ளவர்களாக இருக்க வேண்டாமே&hellip;</p>