Asianet News TamilAsianet News Tamil

GaneshaMoorthy : மதிமுக எம்பி கணேசமூர்த்தி மறைவு துயரத்தை தருகிறது... ஸ்டாலின், எடப்பாடி, அண்ணாமலை இரங்கல்

மதிமுக எம்பி கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்த சம்பவம், மதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவரது மறைவு அதிர்ச்சியும் வேதனையும் தருவதாக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 

Stalin Edappadi Annamalai condole death of MDMK MP Ganesamurthy KAK
Author
First Published Mar 28, 2024, 11:13 AM IST

ஸ்டாலின் இரங்கல்

கல்ல்லமதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபிறகு, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கணேசமூர்த்தி அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், ஒருங்கிணைந்த மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளைத் திறம்பட ஆற்றியவர். 

Stalin Edappadi Annamalai condole death of MDMK MP Ganesamurthy KAK

பின்னர், அண்ணன் வைகோ அவர்களுடன் இணைந்து பயணப்பட்டார். ஆற்றல்மிகு தளகர்த்தராகச் செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொணாத் துயரத்தைத் தருகிறது. அவரது பிரிவால் வாடும் ம.தி.மு.க. தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

எடப்பாடி பழனிசாமி இரங்கல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினரும் மதிமுகவின் மூத்த தலைவருமான திரு. அ. கணேசமூர்த்தி அவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு துயருற்றேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. அ.கணேசமூர்த்தி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Stalin Edappadi Annamalai condole death of MDMK MP Ganesamurthy KAK

ராமதாஸ் அஞ்சலி

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், மதிமுகவின் மூத்த நிர்வாகியும், ஈரோடு மக்களவை உறுப்பினருமான கணேசமூர்த்தி காலமானார் என்ற செய்தியறிந்து  மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மதிமுகவினருக்கும்,  கணேசமூர்த்தி அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும்  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அண்ணாமலை இரங்கல்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், ஈரோடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுகவின் பொருளாளரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான திரு கணேசமூர்த்தி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.திரு கணேசமூர்த்தி அவர்கள் குடும்பத்தினருக்கும், மதிமுக தலைவர் அண்ணன் வைகோ மற்றும் மதிமுக தொண்டர்களுக்கும், தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

GaneshaMoorthy : தேர்தலில் சீட் கிடைக்காத காரணத்தால் தான் கணேசமூர்த்தி தற்கொலை செய்து கொண்டாரா.? வைகோ விளக்கம்

Follow Us:
Download App:
  • android
  • ios