Asianet News TamilAsianet News Tamil

திருப்பரங்குன்றம் சூரசம்ஹாரம்: விண்ணை முட்டிய "அரோகரா ” கோஷம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வேல் வாங்கும் நிகழ்வில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
 

Soorasamharam 2022 : Madurai Tirupparangunram Murugan Temple Festival
Author
First Published Oct 30, 2022, 10:49 AM IST

ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது . 

இன்று சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று மாலை கோவர்த்தனாம்பிகை அம்பாளிடமிருந்து சுவாமி " வேல் வாங்கும் " நிகழ்ச்சி கோயில் ஆலய பணியாளர் திருக்கண்ணில் நடைபெற்றது . இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று "அரோகரா ” கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

மேலும் படிக்க:கந்தசஷ்டி விரதம் 2022 : விரதத்தின் இரண்டாம் நாள் வழிபாடு

முன்னதாக சத்திய கிரீஸ்வரர் , கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சர்வ அலங்காரத்தில் சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார் . இதனை தொடர்ந்து மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி , கற்பக விநாயகர் , துர்க்கை அம்மன் , சத்தியகிரீஸ்வரர் , பவளக்கனிவாய் பெருமாள் , கோவர்த்தனாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது . 

பின்னர் அம்பாள் கரத்திலிருக்கும் நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெறப்பட்டு சுவாமி கரத்தில் சாத்துப்படி செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது . இதயையடுத்து சுவாமி பூ சப்பரத்தில் எழுந்தருளி திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் . 

மேலும் படிக்க:முருகன் 108 போற்றி பாடல் வரிகள்.. தினமும் சொல்லுங்கள்..

Follow Us:
Download App:
  • android
  • ios