தமிழக முதல் அமைச்சர் ஜெ.ஜெயலலிதா மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்.இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு இன்று தெரிவித்தது.

அதே போல, புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தமாநில அரசு அறிவித்துள்ளது.