"இனி மாணவர்களுக்கு மூன்று வண்ணங்களில் புதிய சீருடை" : செங்கோட்டையன் அறிவிப்பு
2018-2019 ஆம் கல்வி ஆண்டில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை புதிய மூன்று வண்ண சீருடைகள் அறிமுக படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருச்சங்கோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "ஐ ஏ.எஸ் பயிற்சிக்கான இலவச மையங்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்படும் என்று கூறினார்.
மேலும் அரசுப்பள்ளிகள் சீருடைகள் 3 வண்ணங்களில் மாணவர்களுக்கு புதிய சீருடை வழங்கப்படும். அதுமட்டுமல்ல, மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும். என்று தெரிவித்தார்.
2018-2019 ஆம் கல்வி ஆண்டில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை புதிய மூன்று வண்ண சீருடைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.