சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி முதல் முதல் 29-ந்தேதி வரை 4 நாட்கள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் வழிப்பாடு செய்ய செல்லலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்ள் கூட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை மலை அடிவார பகுதியில் இருந்து சுமார் 5.5 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் வருகிற 28 ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிப்பாடு நடைபெறும். இந்த கோவில் நடைபாதை தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து வன உயிரினச்சரணாலய பகுதியில் 4.75 கி.மீ தூரத்திற்கு செல்கிறது. ஆடி அமாவாசை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். இதனால் வருகிற 26-ந்தேதி முதல் முதல் 29-ந்தேதி வரை 4 நாட்கள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் வழிப்பாடு செய்ய செல்லலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:திறக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம்..! ஜெயலலிதாவின் பரிசு பொருட்கள் திருட்டா..? உண்மை நிலவரம் என்ன..?
பக்தர்ள் கூட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி மற்றும் மதுரை ஆகிய இடங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு தாணிப்பாறை விலக்கு வரை இரு வழிச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல், தாணிப்பாறை விலக்கில் இருந்து தாணிப்பாறை அடிவாரத்தின் அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையம் வரை வாகனங்கள் வருவதற்கும் மகாராஜபுரம் விலக்கு வழியாக திரும்பிச் செல்வதற்கும் ஒரு வழி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ.. எச்சரிக்கை விடுத்த காவல்துறை
மேலும் தாணிப்பாறையில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு முன்பாகவே அமைக்கப்படுள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்தில், ஆட்டோ, வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று தனித்தனியாக இடவசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு பேருந்துகளுக்காக மட்டும் கோவில் நுழைவு வாயிலுக்கு 800 மீட்டர் முன்பாக மற்றொரு தற்காலிக பேருந்து நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.

பக்தர்களுக்கான அமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் வழிதடங்கள் குறித்தான அறிவிப்புகள் அடங்கிய பதாகைகள் அழகாபுரி, மகாராஜபுரம் விலக்கு, தாணிப்பாறை விலக்கு, வத்திராயிருப்பு பஸ் நிறுத்தம் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பக்தர்கள் யாத்திரை செல்லும்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரிடும் பட்சத்தில் உடனே தகவல் தெரிவிக்கும் வகையில், அதிகாரிகள் கொண்ட குழுக்கள் உருவாக்கப்பட்டு, தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை.. 19 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..
மேலும் வனப்பகுதியில் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் கோவிலிலும், வனப்பகுதியிலும் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலிருந்து மாவட்டத்தின் முக்கிய பகுதிகளுக்கு 24 மணி நேரமும் இரவு நேரங்களில் சிறப்பு பேருந்துகல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு பொது மக்கள் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், வனப்பகுதியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.
