Asianet News TamilAsianet News Tamil

மாணவர்களே உங்களுக்குதான்...! "உதவித்தொகையை" முன் வந்து கொடுக்கிறது இந்த "நிறுவனம்"..!

sarojini thamotharan institute gave scholarship to students
sarojini thamotharan institute gave scholarship to students
Author
First Published May 31, 2018, 7:44 PM IST


சரோஜினி தாமோதரன் நிறுவனம் வழங்கும் கல்வி உதவித்தொகை:

சரோஜினி தாமோதரன் நிறுவனம் வழங்கும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு  இந்தாண்டு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவிப்பணம் ஆண்டு வருமானம் இரண்டு இலட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் பதினொன்றாம் வகுப்பு பயில்வோர் உதவிப்பணம் பெறும் திட்டம்-2018:

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 

90 சதவீதத்திற்கும் மேல் (உடல் ஊனமுற்றோருக்கு 75 % மதிப்பெண்களுக்கு மேல் ) மாணவர்கள் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.

sarojini thamotharan institute gave scholarship to students

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தகுதியுள்ள மாணவர்கள் www.vidyadhan.org என்னும் இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலம் June 30,2018க்கு முன் விண்ணப்பிக்கலாம். 

மேலும் கேள்விகளுக்கு, vidyadhan.tamilnadu@sdfoundationindia.com என்னும் மின்னஞ்சலுக்கு சந்தேகங்களை கேட்டு மெயில் அனுப்பலாம்  அல்லது 7339659929 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளுங்கள்.

திருமதி.குமாரி ஷிபுலால், காப்பாளர், சரோஜினி தாமோதரன் நிறுவனம் கூறுவதாவது என்னவென்றால், 

 “ஒவ்வொரு வருடம் தேர்ச்சியடையும் மாணவர்களில்,சமூதாயத்தில் மிகவும் பின்தங்கி உள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று  உயர்கல்வி பெற முடியாத சூழல்  உருவானால் அவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறோம். 

sarojini thamotharan institute gave scholarship to students

சரோஜினி தாமோதரன் நிறுவனத்தை பற்றி:

சரோஜினி தாமோதரன் நிறுவனம் சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையின் காரணமாக, திருமதி.குமாரி ஷிபுலால் மற்றும் S.D.ஷிபுலால் ஆகியோரின் வலிமையான செயல்பாட்டின் மூலம் 1999ல் தொடங்கப்பட்டு சிறியளவில் ஆலப்புழ, கேரளாவில் உதவிப்பணம் கொடுக்க ஆரம்பித்து தற்போது கல்வி, ஓய்வூதிய திட்டம், ஊட்டசத்து, இயற்கை விவசாயம், கலை மற்றும் கலாச்சாரம் போன்ற பலத் துறைகளில் சாதிக்க துடிப்பவர்களுக்கு உதவி செய்து   வருகிறோம்.

மேலும் அக்ஷய ஸ்ரீ விருது :

இயற்கை  விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு  அக்ஷய ஸ்ரீ விருது  வழங்குகிறது. மேலும் முதியோர்களுக்காக வித்யா ரக்க்ஷம் என்னும் புதிய திட்டம் தற்போது  சேர்க்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தகுதி உடைய மாணவர்கள், இந்த நிறுவனத்தை அணுகி உதவி தொகையை  பெற்றுக்கொள்ளலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios