Sand truck collision kills 4 people - building worked awful fate

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் மீது மணல் லாரி மோதியது. இதில் 4 பேர் பரிதாபாமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த ஒருவர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை மாவட்ட முழுவதிலும் கண்மூடி தனமாக இயக்கப்படும் மணல் லாரிகளால் அடிக்கடி கோரசம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து உசிலம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள ஓட்டுனரை வலை வீசி தேடி வருகின்றனர்.