தமிழகத்தில்‌ அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில்‌ அதிகபட்சவெப்பநிலை இயல்பிலிருந்து 2 -3 டிகிரி செல்‌சியஸ்‌ அஇகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிமை மையம் எச்சரித்துள்ளது. 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சு மற்றும்‌ வெப்ப சலனம்‌ காரணமாக,

01.05.2022, 02.05.2022: தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள்‌ மற்றும்‌ உள்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானதுன் முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌.

03.05.2022 முதல்‌ 05.05.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சல இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அதிகபட்ச வெப்பநிலை:

தமிழகத்தில்‌ அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 -3 டிகிரி செல்‌சியஸ்‌ அஇகமாக இருக்கக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

கடந்த 24 மணி நேரத்தில்‌ பதுவான மழை அளவு (சென்டிமீட்டரில்‌):

தென்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 3, கூடலூர்‌ பஜார்‌ (நீலகிரி) 2, தேவலா (நீலி) 1, தளி (கிருஷ்ணகிரி) 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

05.05.2022: தென்கிழக்கு வங்க கடல்‌ மற்றும்‌ தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாளில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.