Asianet News TamilAsianet News Tamil

மக்களே உஷார்.. உங்க ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் அல்லது சேர்க்கனுமா..? முக்கிய அறிவிப்பு வெளியீடு..

சென்னையில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Ration Card Special Camp tomorrow in chennai
Author
Chennai, First Published May 13, 2022, 1:55 PM IST

சென்னையில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பொது விநியோக திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் ஒரு நுகர்வு பொருள் விற்பனை மையம் தான் நியாய விலைக் கடை.  நாடு முழுவதும் இதுவரை 4.99 லட்சம் நியாய விலைக் கடைகள் உள்ளன. கூட்டுறவுத்துறை வழியாக அனைத்து நகர் மற்றும் கிராமபுறங்களில் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப நியாய விலைக் கடைகளை அமைக்கப்படுகின்றன.

மேலும் படிக்க: மகிழ்ச்சி செய்தி..! மாணவர்களே அலர்ட்.. நாளை முதல் கோடை விடுமுறை.. எத்தனை நாட்கள் விடுமுறை..?

நியாய விலைக் கடைகளின் மூலமாக மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசியப் பொருட்கள்  விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதனை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையினரால் கண்காணிக்கப்படுகிறது.

ரேஷன் தொடர்பான வேலைகளுக்கு மாதம் ஒரு முறை குறைதீர் முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாதாந்திர ரேஷன் காட்டு குறைதீர் முகாம நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி, செல்போன் எண் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க: இனி தாம்பரம் டூ வேளச்சேரி வாகன நெரிசலுக்கு நோ நோ.. சென்னையில் மிக நீளமான பாலம் இன்று திறந்து வைப்பு..

Follow Us:
Download App:
  • android
  • ios