Asianet News TamilAsianet News Tamil

அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை... 17 மாவட்டங்களுக்கு அலர்ட்!!

வளி மண்டல மேலடுக்கு  சுழற்சி காரணமாக தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain fall found in 17 districts of tamilnadu for next 3 hours
Author
Tamilnadu, First Published Mar 20, 2022, 8:37 PM IST

வளி மண்டல மேலடுக்கு  சுழற்சி காரணமாக தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுபெறலாம் எனக் கூறப்படுகிறது.

rain fall found in 17 districts of tamilnadu for next 3 hours

இந்தநிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 24 ஆம் தேதி வரை புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு  சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 22.03.2022 முதல் 24.03.2022 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain fall found in 17 districts of tamilnadu for next 3 hours

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios