Asianet News TamilAsianet News Tamil

Cuddalore Murder : பாஜக கூட்டணிக்கு ஓட்டு போட்டதால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா.? உண்மை தகவல் என்ன.?

பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்ததால் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ள கடலூர் போலீசார், .இந்த சம்பவம் தொடர்பாக வெளியான காணொளி முற்றிலும் பொய்யானது என காவல்துறையினர் மறுத்துள்ளனர். 

Police explain the incident of killing of a woman in Cuddalore during election voting KAK
Author
First Published Apr 22, 2024, 11:34 AM IST

கடலூரில் பெண் கொலை

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், கடலூரில் பாஜகவிற்கு ஓட்டு போட்டதால் திமுகவினரால் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக செய்தி ஒன்று வெளியானது. இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசை விமர்சனம் செய்து அறிவிக்கை வெளியிட்டார். இந்தநிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

சென்னையில் போலீசார் மீது கற்களை வீசி கொடூரமாக தாக்கிய கஞ்சா வியாபாரி! 3 பேர் கைது! முக்கிய குற்றவாளி எஸ்கேப்.!

Police explain the incident of killing of a woman in Cuddalore during election voting KAK

முன் விரோதத்தால் வாக்குவாதம்

ஒருபுறம் கலைமணி,அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார். ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும், ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

Police explain the incident of killing of a woman in Cuddalore during election voting KAK

கிழே விழுந்து உள்காயம்

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் PHC க்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் PS Cr.No.96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. 

Police explain the incident of killing of a woman in Cuddalore during election voting KAK

முற்றிலும் பொய்யான தகவல்

குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி
ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், (செய்தி தொடர்பான ) வீடியோவில் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது என காவல்துறையினர் மறுத்துள்ளனர். 

ஒட்டு போடாததால் பெண் அடித்து கொலை.? திமுகவினரிடம் இருந்து தமிழகத்தை முதலில் ஸ்டாலின் காப்பற்றட்டும்- அண்ணாமலை

Follow Us:
Download App:
  • android
  • ios