Asianet News TamilAsianet News Tamil

’தை பிறந்தால் வழி பிறக்கும்’தமிழில் கெத்தாக பேசிய மோடி.. புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் திறந்து வைப்பு.

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகளை திறந்த வைத்து பிரதமர் மோடி, தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார்.
 

PM Modi Speech
Author
Tamilnádu, First Published Jan 12, 2022, 5:20 PM IST

தமிழகத்தில் 4,000 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை காணொலி வழியாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 2,145 கோடி ரூபாய் மத்திய அரசின் பங்களிப்பிலும் 1,855 கோடி ரூபாய் மாநில அரசின் பங்களிப்பிலும் மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டன. இந்த புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்து பின்னர், பிரதமர் உரையாற்றினார். அனைவருக்கும் தமிழில் வணக்கம் தெரிவித்து தனது உரையை தொடங்கினார். தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து , தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழில் கூறினார். 

PM Modi Speech

மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் 11 மருத்துவ கல்லூரிகள் திறக்கபட்டவுள்ளதாக பிரதமர் பேசினார். இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு 314 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது  597 ஆக உயர்ந்துள்ளது. ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் திறக்கபட்டது இதுவே முதல்முறை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். முன்னாள் உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 9 மருத்துவக் கல்லூரிகள் திறந்ததே சாதனையாக இருந்தது என்று அவர் தெரிவித்தார். மருத்துவ கல்லூரி திறப்பதில் என்னுடைய சாதனையை நானே முறியடித்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார். 

மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா பெருந்தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது என்றும் மத்திய அரசின் காப்பீடு திட்டம் மூலம் மருந்துக்களுக்கான செலவுதொகை குறைந்துள்ளது எனவும் பிரதம் பேசினார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்திற்கான மருத்துவ திட்டங்களுக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தரமான மருத்துவம், குறைவான செலவில் சிகிச்சை எனும் இலக்கை நாம் சில ஆண்டுகளில் அடைவோம் என்று பிரதமர் கூறினார்.

PM Modi Speech

புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டதால் தமிழகத்திற்கு கூடுதலாக 1450 எம்.பி.பி.எஸ் இடங்கள் கிடைக்கும். மருத்துவர்கள், செவிலியர்கள் , மருத்துவ பணியாளர் உட்பட 11000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், நீலகிரி,திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர், நாகை ஆகிய 11 மருத்துவகல்லூரிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் மருத்துவ கல்வி, செம்மொழி தழிழாய்வை மேம்படுத்த ரூ.4100 கோடியில் திட்டங்கள் தொடங்கப்பட்டது. மருத்துவகல்லூரிகள் அமைந்துள்ள மாவட்டங்களில் 1.5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுவர் என்று பிரதமர் பேசினார். 

இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழக அமைச்சர்கள், தமிழக சுகாதாரத்துறை செயலர், தலைமை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் விழாவில் பங்கேற்ற பிரதமரிடம் வலியுறுத்தினார். நீட் தேர்வில் விலக்கு கோரும் தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என்றும் அவர் கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios