pensions for traffic staffs
தமிழக அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கான 13வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை கடந்த வாரம், குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து பணிமனை அலுவலகத்தில் நடந்தது.
இதில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சு வார்த்தையில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படவில்லை.
ஆனால், தொழிற்சங்க நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கை மனுக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்ற கொண்டார். பின்னர், இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு வரும் 28ம் தேதி ஓய்வூதியம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
