யாரும் பயப்பட வேண்டாம்.. தென்மாவட்டங்களில் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.. ஆவின் நிர்வாகம் நடவடிக்கை!
தென்மாவட்டங்களில் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
![No shortage of aavin milk in 4 districts-rag No shortage of aavin milk in 4 districts-rag](https://static-ai.asianetnews.com/images/01hhwc8dnxkk9hazs6j8bax9x6/asianet-news---2023-12-17t224232-554_363x203xt.jpg)
தென் மாவட்டங்களில் கனமழைக் காலத்திலும் முன்னெச்சரிக்கையாக ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் பொது மக்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதையொட்டி இம்மாவட்டங்களில் போதிய அளவு ஆவின் பால் பொதுமக்களுக்கு கிடைக்க ஆவின் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆவின் நிறுவனம் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலாகப் பால், பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பொதுமக்களுக்கு தங்குதடையின்றி பால் கிடைக்க போதுமான அளவு கையிருப்பு உள்ளது. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று ஆவின் நிறுவனம் தெரிவித்து கொள்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..