Asianet News TamilAsianet News Tamil

ரெட் அலர்ட் நெனச்சி யாரும் பயப்பட வேணாம்... நாங்க அலர்ட்டா இருக்கோம்!! அமைச்சர் அதிரடி...

ரெட் அலர்ட்க்கு தேவையான முன்னேர்ப்பாடுகளை  செய்து வருவதாகவும்,  ரெட் அலர்ட் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும்  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,  விளக்கம் அளித்துள்ளார்.

no one wants to be afraid Red alert minister said
Author
Chennai, First Published Oct 5, 2018, 11:55 AM IST

தமிழகத்தின் பல பகுதிகளில்  கடந்த சில தினங்களாக  மழை பெய்துவருகிறது. இந்த நிலையில், வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் மிகப் பெருமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் வருவாய்த் துறை உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

no one wants to be afraid Red alert minister said

இந்தச் சூழ்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இதுகுறித்து நேற்று  செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் என்று நான்கு முறைகளில் நமக்கு அலர்ட் கொடுப்பது உண்டு. தமிழகத்தில் ஏதேனும் ஓர் இடத்தில் 25 செ.மீ மழையளவு கிடைத்தால் அதனை ரெட் அலர்ட் என்று சொல்வார்கள். தொடர் மழை, கன மழை மற்றும் அதனால் ஏற்படும் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். அதனடிப்படையில் 4,399 இடங்கள் மழையினால் பாதிக்கப்படும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

no one wants to be afraid Red alert minister said

இந்த இடங்களில் மீட்புக்குழுவினர் தயாராக உள்ளனர். நீர் வரத்து, வெளியேற்றம் ஆகியவற்றை 24 மணி நேரமும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் எந்தவிதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும்,“வடகிழக்கு பருவமழையின்போது மழைநீரைச் சேமிக்க நீர்நிலைகளைத் தூர்வாரி வைத்துள்ளோம். பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முதல்வர் இருமுறை ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார் என அமைச்சர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios