No free Service no tolls no Insurance for new vehicle

பிஎஸ் 3 வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து , இன்று ஒரே நாள் மட்டுமே, வாகனங்களை விற்பதற்கு கால அவகாசம் உள்ளது. இதனை தொடர்ந்து சில இருசக்கர வாகனங்களுக்கு 22 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது .

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆனால் தள்ளுபடி என்ற வுடன் வாயை பிளந்துக் கொண்டு, வண்டியை வாங்கும் ஆர்வத்தில் உள்ளவர்கள், பொதுவாகவே புது வண்டியை வாங்கும் போது, அதற்காக கொடுக்கப்படும் ப்ரீ இன்சூரன்ஸ் வசதி, ப்ரீ சர்வீஸ் உள்ளிட்ட பல சலுகைகள் மறுக்கப்படலாம் அல்லது சர்வீஸ் செய்யும் போது , இப்பொழுது தள்ளுபடி அறிவிக்கப்பட்ட பணத்தை, வருங்காலத்தில் சர்வீஸ் செய்யும் போது அதில் பிடித்தம் செய்யப்படும்.

மேலும், நாம் சாதாரண விலையில் வாகனங்களை வாங்கும் போது, அதோடு கொடுக்கப்படும் வாகனங்களுக்கு தேவையான அடிப்படையான டூல்ஸ்கள் கொடுக்கப்படுமா என்பது சந்தேகமே.

எனவே இன்று ஒரு நாள் மட்டும் வழங்கப் படும் இந்த சலுகையை நம்பி ஏமாற வேண்டாம் . இன்று இருசக்கர வாகனத்தை வாங்கும் போது, மேற்குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப் படுமா என்பதை முன்கூட்டியே தெரிந்துக் கொள்வது நல்லது.