new year celebration with lots of restrictions in chennai

புத்தாண்டு கொண்டாடத்தின் போது,மது அருந்திவிட்டு வாகனத்தில் வேகமாக சென்று விபத்துக்களை எற்படுத்தினா அல்லது பைக் ரேஸில் ஈடுபட்டாலோ, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு மாபெரும் பிரச்சனையாக மாறி விடும் என காவல்துறை கட்டுப்பாடு விதித்து உள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புத்தாண்டை ஒட்டி பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு 3,500 போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

அதுமட்டும் இல்லாமல் சென்னை முழுவதும் 176 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதி இரவு 11.30 மணி முதல் 1 மணி வரை முக்கிய மேம்பாலங்கள் மட்டுமே திறந்துவிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

வாகனங்கள் செல்ல தடை

மேலும் புத்தாண்டு தினத்தன்று காமராஜர் சாலையில்,இரவு 9 மணி முதல் விடியற்காலை 3 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும்,ஒவ்வொரு ஆண்டும் வாலிபர்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்பதாக நினைத்து,சில விபத்துகளை ஏற்படுத்துவது மிகவும் சோகமானதாக மாறிவிடுகிறது என்பதால், இந்த ஆண்டு எந்த விதமான பிரச்னையும் இன்றி நல்ல முறையில் புத்தாண்டை வரவேற்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது