Asianet News TamilAsianet News Tamil

"நான் கனவில் கூட நினைக்கவில்லை.." சிறந்த கதை சொல்லிக்கான விருதை வென்ற கீர்த்திகாவின் நெகிழ்ச்சி பதிவு..

தனக்கு தேசிய படைப்பாளி விருது வழங்கப்பட்டது குறித்து கீர்த்திகா கோவிந்தசாமி தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார்.

National Creater award best story teller winner Keerthika Govindhasamy shares emotional post in instagram Rya
Author
First Published Mar 11, 2024, 2:40 PM IST | Last Updated Mar 11, 2024, 2:40 PM IST

சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் தேசிய படைப்பாளிகள் விருதை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி சமூக மாற்றம், கல்வி, சுற்றுச்சூழல், வேளாண் மற்றும் சமூக வலைதளங்களில் ஆக்கப்பூர்வமாக விளங்கிய படைப்பாளிகளுக்கு பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி விருதுகளை வழங்கினார். அதில் சிறந்த கதை சொல்லிக்காக தமிழ்நாட்டை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமிக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியின் காலில் கீர்த்திகா கோவிந்தசாமி விழுந்தார். உடனே பிரதமர் மோடியும் பதிலுக்கு கீர்த்திகாவின் காலை தொட்டு வணங்கினார்..

இந்த நிலையில் தனக்கு தேசிய படைப்பாளி விருது வழங்கப்பட்டது குறித்து கீர்த்திகா கோவிந்தசாமி தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ நான் கனவில் கூட நினைக்காத ஒன்று. அப்போது எனக்கு 15 வயது. ஒரு நாள் இரவு, கிராமத்தில் உள்ளவர்கள் என்னைப் பற்றி மோசமாகப் பேசியதை என் அப்பா அழுவதை பார்த்தேன்.. என் வாழ்நாள் முழுவதும், அவர்கள் என்னைப் பற்றி வெட்கப்பட்டார்கள்.

நான் யாரையும் காதலிக்கவில்லை. நன்றாக படித்தேன். வேறு என்ன நான் தவறு செய்தேன். ஆனால் நான் என் சொந்தக்காலில் நிற்க விரும்பினேன்.  நான் என் குடும்பத்தில் உள்ள ஆண்களை சார்ந்து இருக்க விரும்பவில்லை.
அருகிலுள்ள கடைக்கு செல்ல கூட பெண்களாகிய நமக்கு அனுமதி இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். எனக்கு ஏதாவது தேவைப்பட்டால் நான் என் சகோதரர்களிடம் கெஞ்ச வேண்டும். ஒருமுறை நான் 100 மீ தொலைவில் உள்ள கடைக்குச் சென்றேன், ஆனால் எனக்கு அதற்கு அடி விழுந்தது. 

அடிப்படை விஷயங்களுக்காக கூட என் வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருந்தது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆக வேண்டும் என்பதுதான் என் கனவு. அதனால்தான், தொல்லியல் துறையில் முதுகலை பட்டம் பெறுவதற்காக, எனது பட்டப்படிப்புக்கு வரலாற்றைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் நான் பட்டம் பெற்றவுடன் திருமணம் செய்து கொண்டால் போதும் என்றார்கள். அன்றைய தினம் நான்அழுதது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.

பிறகு எனக்கு எந்த வேலையையும் செய்ய ஆரம்பித்தேன். நான் டியூஷன் எடுத்தேன், வீட்டில் பயிற்சி எடுத்தேன், ரிசெப்ஷின்ஸ்டாக இருந்தேன்..  எலக்ட்ரீஷியனாகவும் இருந்தேன். நான் ஒரு செகண்ட் ஹேண்ட் லேப்டாப் வாங்க கிட்டத்தட்ட 1.5 வருடங்கள் ஆனது. நானும் அப்பாவும் 6 வருடங்கள் பேசாமல் இருந்தோம். அந்த அளவுக்கு என் மீது ஏமாற்றத்தில் இருந்தனர்.

 

என் பெற்றோரை தவறாக நினைக்காதீர்கள். அவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள். கிராமங்களில் உங்கள் பெற்றோர் மட்டும் உங்களுக்கான முடிவுகளை எடுப்பதில்லை. அதில் உறவினர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். விஷயங்களை சமநிலைப்படுத்த அவர்கள் தங்களால் இயன்றவரை முயன்றனர். எனக்கு ஆதரவாக அவர்கள் தங்களால் இயன்றவரை முயன்றனர்.

ஆனால் இப்போது 2024-ம் ஆண்டில் நான் அவர்களை முதல்முறையாக விமானத்தில் அழைத்துச் சென்றேன், நம் நாட்டின் பிரதமரிடமிருந்து எனக்கு விருது கிடைத்ததை அவர்கள் பார்த்தார்கள். இந்த உணர்வை என்னால் விளக்க முடியாத. அவர்கள் என்னைப் பார்த்த விதம்., நான் வாழ்க்கையில் ஜெயித்துவிட்டேன் என்ற உணர்வை வழங்கியது.

வரவிருக்கும் தலைமுறை பெண்களுக்கான நல்ல முறையில் இருக்கும் உங்கள் பெண்ணை படிக்க வைப்பதால், அவள் யாரோ ஒருவருடன் ஓடிப் போய்விடுவார் என்று அர்த்தமல்ல என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் படிக்கட்டும். அவர்களுக்கு ஒரு வாழ்க்கை அமையட்டும்.“ என்று பதிவிட்டுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios