Nagapattinam fishermen who were at sea for 4 people mysteriously
நடுக்கடலில் மீன்படித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 4 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை சக மீனவர்கள் தேடிக் கொண்டுள்ளனர்..
Add Asianetnews Tamil as a Preferred Source

நாகை ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார், சத்யபாலன், அருண்குமார் மற்றும் ஸ்ரீநாத். மீனவர்களான இவர்கள் நான்கு பேரும் கடந்த 13 ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர்.

குறிப்பிட்ட தேதியில் இவர்கள் கரை திரும்பாத்தால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் மாயமான 4 பேரை ஆழ்கடலில் தேடி வருகின்றனர்.
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் தற்போது நான்கு மீனவர்கள் மாயமாகி இருப்பது நாகை மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
