mannargudi express time changed to 11 pm

சென்னையில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே புறநகர் மின்சார ரயில் சேவையில் பெரிதும் பாதிப்பில்லை என்றபோதும் சர்வீஸ்கள் குறைக்கப்பட்டன. தாம்பரத்தில் இருந்து அரை மணிக்கு ஒரு சேவை என இருந்தது. தண்டவாளங்களில் புகுந்த மழை நீர் வெளியேற வழியின்றி, அங்கேயே தேங்கியிருந்தது. இதனால் சிக்னல்கள் சரிவர வேலைசெய்யவில்லை. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது போல், சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு மன்னார்குடிக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு மன்னார்குடிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.20 மணிக்கு பதிலாக இரவு 11 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.