lorries strike waiting for demand fulfill Farmers suffer for Rs.20 crore business lost
கரூர்
கரூரில் 2000-க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 4-வது நாளாக ஈடுபட்டுள்ளன. இதனால் இம்மாவட்டத்தில் மட்டும் ரூ.20 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி விளைப் பொருட்களான வாழைத்தார், சின்ன வெங்காயம், சோளம், நெல் போன்ற பொருட்களும் ஏற்றுமதி செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கில் வர்த்தகம் முடங்கியது.
கரூரில் மட்டும் ரூ.20 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள், நெசவுத் தொழில் செய்வோர் என முக்கிய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் கவலை அடைந்தனர்.
