Asianet News TamilAsianet News Tamil

நடுரோட்டில் பெண்களை கொடூரமாக தாக்கிய டிஎஸ்பி : மதுக்கடைக்கு எதிராக போராடியதால் தடியடி

lathi charge against women in tirupur
lathi charge-against-women-in-tirupur
Author
First Published Apr 11, 2017, 5:18 PM IST


திருப்பூர் சாமாளபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஐந்து மணி நேரத்திற்கும் மேல், போராட்டம் நடத்திய பெண்களை போலீசார் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது .

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் நெடுஞ்சாலை ஓரம்  டாஸ்மாக்  மதுபானக்கடை இயங்கி வருகிறது. இதனை மூட கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் போராட்டம் நடத்தினர் 

lathi charge-against-women-in-tirupur

இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.போராட்டக்காரர்களை களைந்து போகக் கூறி போலீசார்  எச்சரிக்கை  விடுத்தனர். அப்போது அந்த வழியாக  சூலூர்  எம் எல் ஏ கனகராஜ்  வந்தார் . அவரை வழிமறித்தபொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை  மூடுவதற்கு வழி செய்ய வேண்டும் என்று அவரை சிறை பிடித்தனர் .

இதன் காரணமாக   சூலூர் எம்எல்ஏ அங்கிருந்து செல்வதற்கு முடியாமல் தவித்ததாக தெரிகிறது.இதையடுத்து காவல் துறை அதிகாரிகளுக்கு   தகவல் தெரிவிக்கப்பட்டது.  விரைந்து வந்த அதிரடி படை  போலீசார் , அங்கிருந்த  பொது மக்களை  கண் மூடித்தனமாக  தாக்கினர் .

lathi charge-against-women-in-tirupur

அப்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன்  ஒரு பெண்மணியின் கன்னத்தில் ஓங்கி பளார் என நடு ரோட்டில் அடித்தார்.அதனை தொடர்ந்து, பலரது  மண்டை உடையும் அளவுக்கு போலீசார் கண் மூடித்தனமாக தாக்கினர்.

lathi charge-against-women-in-tirupur

இதனால் தமிழக மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 

Follow Us:
Download App:
  • android
  • ios