காஞ்சிபுரம் 36வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் திடீரென தற்கொலை செய்துகொண்ட நிலையில், காஞ்சிபுரம் 36வது வார்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக காஞ்சிபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் 36வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் திடீரென தற்கொலை செய்துகொண்ட நிலையில், காஞ்சிபுரம் 36வது வார்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக காஞ்சிபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த12,838 வார்டுகளுக்கு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 36 ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட ஜானகிராமன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் அதிமுக வேட்பாளரான ஜானகிராமன் இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே சில வார்டு தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் 36 ஆவது வார்டுக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரம் 36வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் இன்று திடீரென தற்கொலை செய்துகொண்ட நிலையில், காஞ்சிபுரம் 36 வது வார்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக காஞ்சிபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மரணமடைந்ததால் 36 வது வார்டுக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள 36 வது வார்டுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
