கஜா புயலால் கடும் சேதமடைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்தும், மின்சாரம் தாக்கியும் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வங்ககடலில்உருவானகாற்றழுத்ததாழ்வுபகுதி, புயலாகமாறியது. தமிழகத்தைநோக்கிவந்தஇந்தபுயலுக்குகஜாஎன்றுபெயரிடப்பட்டுஇருக்கிறது. கஜாதீவிரபுயலின்மையப்பகுதிநள்ளிரவு 12.30 மணிமுதல்அதிகாலை 2.30 மணிக்குள்கரையைகடந்தது.

கஜாபுயலின்கடைசிபகுதிநாகை - வேதாரண்யம்இடையே தற்போது கரையைகடந்துவருகிறது, கஜாபுயல்முழுமையாககரையைகடக்கஇன்னும் 1 மணிநேரம்ஆகும்எனவானிலைஆய்வுமையம்தெரிவித்துள்ளது

அதே நேரத்தில் கஜாதீவிரபுயல்தொடர்ந்துமேற்குநோக்கிநகர்ந்து, 6 மணிநேரத்தில்புயலாகவலுவிழக்கும். இதனால், உள்மாவட்டங்களில்புயல்செல்லும்பகுதிகளில்மழைபெய்யவாய்ப்புஉள்ளதுஎன்றும்வானிலைஆய்வுமையம்தெரிவித்துள்ளது

இந்நிலையில் நாகை மாவட்டத்தை விட கடலூர் மாவட்டம் கஜா புயலால் கடும் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்லாயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. ஒரு சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் நேற்று அரவு இருளில் மூழ்கிக் கிடந்தது.

இந்நிலையில் வேப்பூர் அருகே சுவர் இடிந்து விழுந்து அய்யம்மாள் என்ற பெண் உயிரிழந்துள்ளார். இதே போல் குள்ளஞ்சாவடி அருகே ஆன்ந்த் என்பவர் மின்சாரம் தாக்கு உயிரிழந்தார்.

இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.