சென்னை மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியருமான க.ப.அறவாணன் இன்று காலமானார். அவருக்கு வயது 77.
வெள்ளுடை, தொப்பி என்றாலே பொதுவாக நம் அனைவரின் நினைவுக்கும் வருவது சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் க.ப.அறவாணன்தான். அப்படி ஒரு ஒழுக்கம், தமிழ் மீது அளவு கடந்த பற்று, நேர்மை என பலவற்றுக்கு உதாரணமாக சொல்லும் ஒரு மனிதர்தான் க.ப.அறவாணன்.
9 ஆகஸ்ட் 1941-இல்நெல்லைமாவட்டத்திலுள்ளகடலங்குடிஎனும்ஊரில்பிறந்தஅறவாணன், வெள்ளைஆடைகள், தொப்பிஎனவித்தியாசமானதோற்றத்துடன்தமிழ்நிகழ்ச்சிகளில்கலந்துகொண்டுஅனைவரையும்கவர்ந்தவர்.

நீண்டகாலமாகதமிழர்வரலாறு, சமூகவியல், மானுடவியல், தமிழ்இலக்கியம்எனப்பல்வேறுதளங்களில்தமிழ்உலகில்உரைகள்வழங்கியும், நூல்கள்எழுதியும்வந்தார். இதுவரையில்சுமார் 56 நூல்களைபல்வேறுதலைப்புகளில்எழுதியுள்ளார்.
சென்னைமற்றும் நெல்லைமனோன்மணியம்சுந்தரனார் பல்கலைக்கழங்களில் அறவாணன் துணை வேந்தராக பணியாற்றி வந்துள்ளார்.
மேலும் புதுச்சேரிமத்தியப்பல்கலைக்கழகத்தில்தமிழ்த்துறைப்பேராசிரியராகப்அறவாணன் பணியாற்றி வந்தார். மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவராக இருந்தார். அண்மைக்காலமாக உடல் நலம் குன்றி இருந்த அறவாணன் இன்று அதிகாலை அரணமடைந்தார்.
