judge karnan refuse to appear in court

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகப் போவதில்லை என்று கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவர் நீதிபதி கர்ணன். இவர் தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கர்ணன் இருந்த போது உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து இவர் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.

இருமுறை நீதிமன்றத்தில் கர்ணன் ஆஜராகாத்தால் ஜாமீனில் வெளிவரக் கூடிய பிடிவாரண்டை உச்சநீதிமன்றம் கடந்த வாரத்தில் பிறப்பித்தது.இதற்கிடையே இவ்விவகாரம் குறித்து கொல்கத்தாவில் நீதிபதி கர்ணன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருப்பது என்னை தொல்லை செய்வதற்காகத் தான். மார்ச் 31 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டேன்...இவ்வாறு அவர் கூறினார்.